தம்பி சுதாகரனே!
கன்னங்கரியவன்
கள்ளமில்லா சிரிப்பினன்
என்னைவிட ஈரைந்து வயதால் இளையவன்!
தன்னையென் தம்பியாய் தனக்குள் வரித்தவன்!
என்னவானான்?
எங்குதான் போனானவன்?
உதிரத்தில் ஒன்றல்லதான்!
உரிமை எடுத்தவன்!
அதரத்தால் அக்காவென்று அன்பு சொரிந்தவன்!
பதறவெமைவிட்டு பாவி, அப்பாவி எங்கே?!
சிதறும் நினனவுகள்! சிந்திடும் ஏக்கங்களாய்!
மூன்றுவேலிகள் தள்ளியே அவன்வீடு
மூன்றுடன் பிறப்புகள்!
மூன்றாவது பிள்னளயிவன்!
சான்றேதுமில்லையே சரித்திரம் ஆனானோ!
ஆச்சே ஆண்டுகள் பத்து!
ஆண்மகன் அவன்தொலைந்து!
ஓட்டிலே காய்ச்சி ஓலையில் ஊற்றினாலும்
கூட்டிவரும் தோழர்க்கு விருந்து வைப்பாளன்னை!
நாட்டில் வந்ததே பயங்கரம்!
நாசமாச்சே அத்தனையும்!-நெஞ்சில்
பூட்டிவளர்த்த மூத்தமகன் போய்விட்டானே!
போனவிடமேதோ?
கல்விமானில்லை தான்நீ! –அதன்
கனம் தெரிந்த தமிழன்நீ!
கணிதத்தில் பிரியமானவனே
காற்றாகித்தான் போனாயோடா தம்பீ!
துன்பத்தில் துணைநின்றதுன் சொற்கள்
நீந்திவந்த கரையதனில் நீயில்லையடா சுதா!
உன்னைக் காவு கொண்டானரா?
என்னவெல்லாம் நீநினைப்பாயோ?
இன்னும் நீ இருக்கின்றாயா? ஓடிவாடா!
மேடையேற மறுத்தவுன்னை
ஏறவைத்து மகிழ்ந்தோமே!
தேடிவரும் கூட்டங்கள் சிரிக்கவைக்கும் கலைஞனாய்
நாளடைவில் ஆனாயே! தனியிடம் எடுத்தாயே!
நாட்டைவிட்டு வந்தாலும்
நெஞ்சக்கூட்டில் உள்ளதடா உன்னினைவு!
காதலிலே கனவு கண்டாய்!
காதலையுமே காவுகொடுத்தாய்!
பூதலத்திலுள்ளாயா?
போய்த்தான்விட்டாயா?
காணுகின்ற கனவில்கூட
கவலைதோய்ந்தவுன்முகமே தெரியுதடா!
சொட்டுகின்ற மழையிலே
கிட்டுகின்ற பற்களுடன் -ஊர்
விட்டுநாம் கிளாலிபோகையிலே
இருண்டுவிட்ட உந்தன்முகம்!
எப்படியும் கொழும்பு போங்கோ வதனியக்கா
என்றவன் நீகொண்டதுயர்
சட்டியில் கறுப்பாக
ஒட்டிக் கொண்டதையனே! ஓடிவாடா!
கூடிப்பிறக்காவிடினும்
கூடியளவு உதவிநின்றாய்!
கூடப்பிறந்தவள் கலங்குகிறாள்!
தேடவைத்தே நீபோனதென்ன?
உன்னைப் பிரிந்த துயரினிலே
தன்னிளமை தொலைத்ததாலே
இன்னுமுன்னக்காள் இருக்கின்றாள் குமராக!
என்னவெல்லாம் செய்தாயவளுக்கு
இன்னுந்தான் வேகின்றாள் அதைநினைத்து!
என்னாலாற முடியலைன்னா
உன்னக்காள் நிலைதான் சொல்!
உன் சீண்டலில்லை! உன் விமர்சனங்களில்லை!
உன்வீட்டில் மட்டுமல்ல இந்தநிலை - இப்போதும்
நம்நாடடில் காணாதோர் பட்டியலும் நிளுகின்றது!
என்றுதான் இந்தநிலை எங்கள் நாட்டில் மாறிடுமோ?
=================================================
கன்னங்கரியவன்
கள்ளமில்லா சிரிப்பினன்
என்னைவிட ஈரைந்து வயதால் இளையவன்!
தன்னையென் தம்பியாய் தனக்குள் வரித்தவன்!
என்னவானான்?
எங்குதான் போனானவன்?
உதிரத்தில் ஒன்றல்லதான்!
உரிமை எடுத்தவன்!
அதரத்தால் அக்காவென்று அன்பு சொரிந்தவன்!
பதறவெமைவிட்டு பாவி, அப்பாவி எங்கே?!
சிதறும் நினனவுகள்! சிந்திடும் ஏக்கங்களாய்!
மூன்றுவேலிகள் தள்ளியே அவன்வீடு
மூன்றுடன் பிறப்புகள்!
மூன்றாவது பிள்னளயிவன்!
சான்றேதுமில்லையே சரித்திரம் ஆனானோ!
ஆச்சே ஆண்டுகள் பத்து!
ஆண்மகன் அவன்தொலைந்து!
ஓட்டிலே காய்ச்சி ஓலையில் ஊற்றினாலும்
கூட்டிவரும் தோழர்க்கு விருந்து வைப்பாளன்னை!
நாட்டில் வந்ததே பயங்கரம்!
நாசமாச்சே அத்தனையும்!-நெஞ்சில்
பூட்டிவளர்த்த மூத்தமகன் போய்விட்டானே!
போனவிடமேதோ?
கல்விமானில்லை தான்நீ! –அதன்
கனம் தெரிந்த தமிழன்நீ!
கணிதத்தில் பிரியமானவனே
காற்றாகித்தான் போனாயோடா தம்பீ!
துன்பத்தில் துணைநின்றதுன் சொற்கள்
நீந்திவந்த கரையதனில் நீயில்லையடா சுதா!
உன்னைக் காவு கொண்டானரா?
என்னவெல்லாம் நீநினைப்பாயோ?
இன்னும் நீ இருக்கின்றாயா? ஓடிவாடா!
மேடையேற மறுத்தவுன்னை
ஏறவைத்து மகிழ்ந்தோமே!
தேடிவரும் கூட்டங்கள் சிரிக்கவைக்கும் கலைஞனாய்
நாளடைவில் ஆனாயே! தனியிடம் எடுத்தாயே!
நாட்டைவிட்டு வந்தாலும்
நெஞ்சக்கூட்டில் உள்ளதடா உன்னினைவு!
காதலிலே கனவு கண்டாய்!
காதலையுமே காவுகொடுத்தாய்!
பூதலத்திலுள்ளாயா?
போய்த்தான்விட்டாயா?
காணுகின்ற கனவில்கூட
கவலைதோய்ந்தவுன்முகமே தெரியுதடா!
சொட்டுகின்ற மழையிலே
கிட்டுகின்ற பற்களுடன் -ஊர்
விட்டுநாம் கிளாலிபோகையிலே
இருண்டுவிட்ட உந்தன்முகம்!
எப்படியும் கொழும்பு போங்கோ வதனியக்கா
என்றவன் நீகொண்டதுயர்
சட்டியில் கறுப்பாக
ஒட்டிக் கொண்டதையனே! ஓடிவாடா!
கூடிப்பிறக்காவிடினும்
கூடியளவு உதவிநின்றாய்!
கூடப்பிறந்தவள் கலங்குகிறாள்!
தேடவைத்தே நீபோனதென்ன?
உன்னைப் பிரிந்த துயரினிலே
தன்னிளமை தொலைத்ததாலே
இன்னுமுன்னக்காள் இருக்கின்றாள் குமராக!
என்னவெல்லாம் செய்தாயவளுக்கு
இன்னுந்தான் வேகின்றாள் அதைநினைத்து!
என்னாலாற முடியலைன்னா
உன்னக்காள் நிலைதான் சொல்!
உன் சீண்டலில்லை! உன் விமர்சனங்களில்லை!
உன்வீட்டில் மட்டுமல்ல இந்தநிலை - இப்போதும்
நம்நாடடில் காணாதோர் பட்டியலும் நிளுகின்றது!
என்றுதான் இந்தநிலை எங்கள் நாட்டில் மாறிடுமோ?
=================================================